மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது

கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது

இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது

மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே

கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்

ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே

ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே

நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/45.html