நான் ஒரு பிறவித் தொண்டன்;

தொண்டிலேயே தான்

எனது உற்சாகமும், ஆசையும்

இருந்து வருகிறது.

தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது.

தலைவனாக இருப்பது என்பது,

எனக்கு இஷ்டமில்லாததும்

எனக்குத் தொல்லையானதுமான காரியம்.

ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும்,

எனது உண்மைத் தோழரும்

கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின்

அபிப்பிராயத்தையும், வேண்டுகோளையும்

மறுக்க முடியாமலும், தலைமைப் பதவியை

ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய,

இதில் எனக்கு மனச் சாந்தியோ,

உற்சாகமோ இல்லை.

இருந்தாலும் என் இயற்கைக்கும்,

சக்திக்கும் தக்கபடி

நான் நடந்து வருகிறேன் என்றாலும்,

அதன் மூலம் எல்லோரையும்

திருப்தி செய்ய முடியவில்லை.

 

(சென்னை கன்னிமரா ஒட்டலில் 06.10.1940 - இல் சொற்பொழிவு,

குடிஅரசு, 13.10.1940)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_24.html