அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது.

 ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் எச்சரிக்கை விடுகின்றது.
புலிகள், தமது சொந்த மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத போது, நபர்களை அவதூறு செய்யவென நிதர்சனம் டொட் கொம் என்ற இணையம் ஒன்றை வைத்துள்ளனர்.


இதேபோல் புலியெதிர்ப்பு கும்பல் தங்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலமாகும் போது, அவதூறு புரியவென நெருப்புக் டொட் கொம் என்ற இணையத்தை வைத்துள்ளனர். அறிவு, நேர்மை எதுவுமற்ற வகையில் தூற்றுவது மூலம், தமது சொந்த பாசிச அரசியலை தக்கவைக்க முனைகின்றனர். இது சாத்தியமில்லாத போது கொலைகளை செய்கின்றனர். உண்மையில் இரு பிரதான போக்கைக் கொண்ட புலிசார்பு, புலியெதிர்ப்பு இணையங்கள் மற்றும் ஊடகங்கள், தமது மையங்களுக்கு இடையில் பரஸ்பர தொடர்பையும் இணைப்பையும் அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன. இதற்கு வெளியில் இவை மாற்றுக் கருத்தை அங்கீகரிப்பதில்லை. மாறாக அவதூறையையே அரசியல் ஆயுதமாக கொள்கின்றனர்.

 

இந்த வகையில் நெருப்பு கொம் 05.03.2006 அன்று எனக்கு எதிராக அவதூறு ஒன்றைக் கட்டமைத்தது. மாற்றுக் கருத்துக்காக புலம்பியழும் புலியெதிர்ப்பு நடிகர்கள், நியத்தில் எனது கருத்தை மாற்றுக் கருத்தாக ஆய்வு செய்ய முடியாது போகின்றது. எழுதுவதை நிறுத்தக் கோரும் இவர்கள், "ஜனநாயக" வேஷம் வேறு போடுகின்றனர்.

 

"ஜனநாயக" (நாய்) வேஷம் போட்டு வெளியிடும் தமது சொந்த அவதூறில்
"அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்!

(முன்னாள் NLFT உறுப்பினர், சமர்; மற்றும் தமிழ்சுற்று இணையத்தள ஆசிரியர்.)


அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவாகள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. நீங்கள் ஒரு சுத்தமான மார்க்சியர் என்பதனடிப்படையில், உங்களைப் பொறுத்தளவில் உங்களுக்கத்தெரிந்த மார்க்சியத்திற்கப்பால்
வேறெந்த மனுதர்மமோ, நியாயமே, தத்துவங்களே இருக்க முடியாதுதான். அண்ணா!


உங்களைப்போல் சாதி, மத, இன, தத்துவ, அரசியற் சுத்தம் கடைப்பிடித்தோர் அனைவரும் மனிதகுலத்தின் அழிவிற்கே வழி வகுத்தனர். க்pட்லர், பொல்பொட், பிரபாகரன், என மனித குல அழிவிற்கு இட்டுச்சென்றோர் பட்டியல், வரலாற்ரில் தொடர்ந்த வண்ணமுள்ளது.

 

இன்று பிரபாகரனின் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர் செய்வது போல்தான் நீங்களும் நடந்து கொண்டிருப்பீர்கள். ஓர் வித்தியாசம், அவர் தமிழ்தேசியமென்ற பெயரால் கொடூமையிழைக்கிறார், நீங்கள் தமிழ்தேசியத்துடன் மார்க்சியத்தையும் பயன்படுத்தி உங்கள் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்துவீர்கள் நியாயப்படுதினீர்கள். (உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே)


இதை நான் ஏன் சொல்லுகிறொனென்றால், அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக்கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள். இத் தீர்ப்புகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் நீங்கள் முன் வைப்பதில்லை. உங்களுக்கு இம் மனிதர்கள் மீது, உங்கள் தீர்ப்பை செயற்படுத்தும் வாய்ப்பு மட்டும் இருக்குமானால், இவர்களில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.

 

ஏந்த வித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், உடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடயவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது. ஏனெனில் உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச்சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே.. இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது, நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகிPனீர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.

 

இன்று வரையும் இதைப்பற்றி ஒருவருக்கும் நாம் பகிரங்கப்படுத்தியது கிடையாது. (உங்கள் உறவினர் காலம் சென்ற நண்பன் கலைச்செல்வனைத் தவிர. அவர் பகிரங்கமாக உங்களை கொலைகாரன் என அழைத்தர்; நாம் பலர் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளோம், அதனால் இன்று எல்லாம் இழந்து மன அழுத்தத்துடன் அகதிகளாயுள்ளேம். ஏம்மைப் போன்று தான் நீங்களும் எனும் புரிந்துணுர்வில் தான் நாம்மிற் பலர் உங்களை பகிரங்கப்படுத்தியது கிடையாது. அது மட்டுமல்ல எங்களைப்போன்று, உங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்ற மனிதாபிமானத்தில்தான்.

 

ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவனத்தில் கொண்டது கிடையாது. இனியாவது மனிதவிழுமியங்களையும், மனிதாபிமானத்தையும் கருத்திற் கொண்டு; உங்கள் விமர்சனத்தை நாகரீகமான மொழியில் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளது அண்ணே.

 

புரிந்துணுர்வையும் மனிதாபிமானத்தையும் எதிர்பாற்கும் தம்பி
சுந்தரமூர்த்தி சகாதேவன்(சின்னத்தேவா-ஒட்டி)"

 

அண்ணை! நாங்கள் உங்களை அண்ணை என்று அழைப்பதே பொருத்தமண்ணை. அவதூறுகளைக் கட்டமைப்பதில் நீங்கள் அண்ணை தான், அண்ணை!

 

அண்ணை மன்னித்துக் கொள்ளுங்கோ. உங்கட புலியெதிர்ப்பு கும்பலின் பாசிசத்தை அம்பலப்படுத்துவதற்காக, மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை. மிரண்டுவிடாதையுங்கோ அண்ணை, ஊரெல்லாம் கொலைக்களமாக்கிவிடாதையுங்கோ அண்ணை. ஊர்பெயர் தெரியாத அனாதை அண்ணையே! கொலைகார அண்ணைமார்களே கையெடுத்து கும்பிடுறம் அண்ணை. அண்ணை! எப்படி அண்ணை! உங்களை நாங்கள் எப்படி அண்ணை எழுதோணும். அதையும் சொல்லுங்கள் அண்ணை. அண்ணை! உங்கடை ஜனநாயகம், எப்படி அண்ணை, எழுதச் சொல்லுதண்ணை! உங்கடை புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கத்திடம் கேளுங்கண்ணை. சிறை மீண்ட செம்மல் ஜெயதேவனிடமும்; கேட்டுச் சொல்லுங்க அண்ணை. முடிந்தால் சுவிஸ்சில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிற அந்த அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை! கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் கொலை செய்து திரிகின்ற கருணா அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை!

 

அண்ணைமார்களின் அரசியலற்ற புலியெதிர்ப்பு அவதூறுகளே இவை. புலி எதிர்ப்புக் கும்பலின் மக்கள் விரோதச் செயலை அம்பலப்படுத்தி எழுதுவதை நிறுத்தக் கோரும் எச்சரிக்கையே, இதன் உள்ளடக்கம். அரசியலற்ற கூலிக் கும்பலிடம் இப்படியான அவதூறுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இது போன்ற அரசியலற்ற அனாதைகளின் புலம்பலுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்று சில நண்பர்கள கூறினார்கள்;. இதனால் இதை எழுதுவதில்லை என்று இருந்தேன். அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத திடீர் ஜனநாயகவாதிகள் சிலர், இதை ஈமெயில் மூலம் உலகமெங்கும் அனுப்புகின்றனர். இந்த அரசியல் ஓடுகாலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில், அம்பலப்படுத்த வேண்டும் என சிலர் கோரினர். அத்துடன் இந்த ஊர்பெயர் தெரியாத இந்த அனாமதேய விபச்சார தரகர்களுக்கு அவர்களின் அரசியலை அம்பலப்படுத்தவும் இது உதவுகின்றது.


1. முதலில் என்மீதான எந்த அவதூறையையும் நீங்கள் கூறமுன்னர், நான் எழுப்பும் அரசியலுக்கு முதலில் நேர்மையாக பதிலளிக்க வேண்டியதே அறிவு மற்றும் நேர்மையாகும். இது உங்களின் புலியெதிர்ப்பு கும்பல் அரசியலில் கிடையவே கிடையாது. பதிலளிக்க முடியாத போது, அவதூறைச் சோடிப்பது தொடங்குகின்றது.

 

2.அரசியல் ரீதியாக எனது அரசியலுக்கு பதிலளித்த பின்புதான், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் என்மீது இருந்தால் அதை முன்வைக்க வேண்டும்.

 

இங்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கும் நேர்மையும், அந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. அரசியல் இல்லாதவரை, தனிப்பட்ட நேர்மையான குற்றச்சாட்டும் கிடையாது. இதனால் நேர்மையற்ற அவதூறுகள் பொழியப்படுகின்றது. இது புலி அரசியல் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அரசியலும் கூட.

 

அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத ஒரு நிலையில், தம்மை இனம் காட்டமுடியாத நிலை உருவாகி, அரசியல் அனாதைகளாகி வாயில் வந்தபடி எல்லாம் தூற்றுவதால் எதுவும் நடந்துவிடாது. அரசியல் அவதூறுகளை நான் சந்திப்பது, இது முதலுமல்ல, இதுவே இறுதியுமாக இருக்காது. மக்கள் விரோத அரசியல், அரசியல் காழ்ப்புக் கொள்ளும் போது அவதூறுகள் தான் அவர்களின் தங்குமிடமாகிவிடுகின்றது.

 

என் மீதான இவை போன்ற அவதூறுகளுக்கு கடந்தகாலத்தில் தெளிவாக பதிலளிக்கப்பட்டது. இதைவிட நான் யார் என்று அனைத்து உலகமும் தெரிய எழுதுபவன்;. அதற்காக நடைமுறையில் வாழ்ந்து, அதற்காக போராடுபவன். எனவே உண்மைக்கும், நேர்மைக்கும் விளக்கு பிடித்துக்காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடைய "ஜனநாயக" மூகமுடிக்கு பின்னால் உள்ள ஜனநாயக விரோத வக்கிர முகத்தை, உலகத்துக்கு இதன் மூலம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

 

உங்களுடைய இந்த "ஜனநாயகம்" எதைச் சொல்ல முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலைப் பற்றி எழுதுவதை நிறுத்து என்பதையே எனக்கு உங்களுக்கும் சொல்ல முனைகின்றது. அப்படி யாராயினும் மீறி எழுதினால் அவதூறுகளை பொழிவோம் என்கின்றது. இதைத்தானே எமது கடந்தகால இயக்கங்கள் முதல் இன்று புலிகள் வரை கூறுகின்றனர். இதைத்தான் புலியெதிர்ப்பு அணியும் மீண்டும் கூறுகின்றது. இதற்கு அவர்கள் வழங்கிய பெயர் "ஜனநாயக" மாகும். நெருப்பு கொம் புலியெதிர்ப்பு கும்பலின் ஒரு அங்கம். பரஸ்பரம் புலியெதிர்புக் கும்பலின் ஒருங்கினைவில் உள்ளது. இணையங்கள் பரஸ்பர தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளன.

 

அரசியல் ரீதியாக எதுவுமற்ற லும்பன்களை அடிப்படையாக கொண்டு, வெறும் புலியெதிர்ப்பில் பாசிசத்தையே அரசியலாக கொண்டு இயங்குகின்றது. கருணா செய்யும் தொடரான பச்சைக் கொலைகளை, நியாயப்படுத்தும் மற்றொரு புலியெதிர்ப்பு பாசிட்டுக்கள் தான் இவர்கள்.

 

இந்த பாசிட்டுக்கள்; கூறுகின்றனர் "அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக் கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள்." என்று புலம்புகின்றனர். ஐயோ பாவம்.

 

இப்படி கூறாமல் எப்படி, உங்களை எப்படி அண்ணை கூறுவது. இதில் என்ன தவறு உண்டு. அதையாவது சொல்லியிருக்கலாமே அண்ணை. நீங்கள் இப்படி இல்லை என்று நிறுவியிருக்கலாமே அண்ணை. அண்ணைமார்களே!

 

சரி நாங்கள் சில உதாரணங்கள் மூலம் நீங்கள் கோவிக்க மாட்டீர்கள் என்று நம்பி, நிறுவிக் காட்டுகின்றோம் அண்ணை. அண்ணை! பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் ஜெயதேவன் குலாவுவது என்ன அண்ணை? அதற்கு என்னவென்று சொல்வது அண்ணை. சொல்லுங்க அண்ணை. சிவலிங்கம் ரி.பி.சியில் 02.03.2006 மிரட்டி கூறியபடி, பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் 07.03.2005 வழங்கிய மகஜருக்கு என்ன பெயரண்ணை? மேற்கின் சட்டங்கள் படி, இவர்கள் ஏன் அண்ணை போராட முடியவில்லை அண்ணை! விசேட சலுகைக்காக, ஏகாதிபத்தித்தின் மலத்தை ஏன் அண்ணை நக்குகினம்! தெரிந்தால் சொல்லுங்கோ அண்ணை! உங்கடை ஜெர்மனி ரி;பி;சி ஆய்வாளர் ஜெகநாதன், ஜெர்மனி பொலிசாருக்கு நாங்கள் தகவல் கொடுப்பதாக கூறுகின்றரே, அதற்கு பெயர் என்ன அண்ணை? டென்மார்க் குமாரதுரை ஏகாதிபத்தியத்துக்கு தகவல் வழங்குவதாக அவரே கூறுகின்றாரே, அது என்ன அண்ணை. ஏகாதிபத்தியத்துடன் உள்ள தொடர்புக்கு என்ன பெயர் அண்ணை? இந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கும், இந்த நாட்டு மக்களையும் சாராத அனைத்தும் மக்கள் விரோதமண்ணை. உங்களுக்கு உது எங்கே தெரியப்போகுது அண்ணை? கோவியாதையுங்கோ அண்ணை! மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை!

 

சரி புலிகளிடம் இருந்து பிரிந்த கருணா, எப்படி அண்ணை இந்திய கைக்கூலியாகவே உருவான ஈ.என்;.டி.எல்.எப் வோடு ஒப்பந்தம் செய்ய முடிந்தது அண்ணை! உங்கடை கருணா அண்ணையும் இந்தியக் கைக் கூலியாகிவிட்டாரா அண்ணை? எப்படி அண்ணை இது சாத்தியம்? கோவிக்காமல் சொல்லுங்க அண்ணை! எப்படி இது ஏற்பட்டது அண்ணை! அவரின் இந்திய சார்பு அறிக்கைகள், மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை சாத்தியம்! கோவிக்காமல் ஊருக்கு அதைச் சொல்லுங்கண்ணை. இதையா நாம் எழுதக் கூடாது என்று அவதூறு பொழிந்து மிரட்டுகின்றீர்கள் அண்ணை? எப்படி அண்ணை! நாறுகின்ற இந்த விடையத்தை சொல்லாமல் விடமுடியும் அண்ணை. உங்களைப் போலே அண்ணை, மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்யமுடியாது அண்ணை. துரோகத்தை சொல்வதால் கோவியாதையுங்கொ அண்ணை!

 

ஏகாதிபத்தியம், பிராந்திய வல்லரசு, இலங்கை பேரினவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடும், அவர்களுடன் கொண்டுள்ள உங்கள் காதல் உறவை என்னவென்று சொல்வது அண்ணை! தெரிந்தால் சொல்லுங்கண்ணை! இவை அனைத்தும் மக்கள் விரோத போக்கிலானதே என்பதையே தெளிவாக நிறுவுகின்றது. மக்களின் எதிரிகளுடன் நீங்கள் கொண்டுள்ள காதல், அரசியல் விபச்சாரத்தைத் தவிர வேறு எதையண்ணை நிறுவுவது. எம் மீதான அவதூறுகள் மூலம், இந்த நாற்றத்தை மூடிமறைக்க முடியாதண்ணை. எதார்த்தமும், உங்கள் சொந்த நடைமுறை சார்ந்த விபச்சாரத் தரகுத்தனமும், அதை அம்பலமாக்கிவிடுகின்றது.

 

1.புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டவர்களை, புலியெதிர்ப்பு கும்பல் என்று அழையாமல் எப்படி அழைப்பது அண்ணை. புலியெதிர்ப்பை விட்டால் உங்களிடம் வேற என்ன அரசியல் தான் உண்டு? அதைச் சொல்லுங்க அண்ணை.

 

2.ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று நாம் சொல்வது உங்களுக்கு எந்த வகையில் பொருந்தாது அண்ணை?. அதைச் சொல்லுங்க அண்ணை. ரி.பி.சி வானொலியில், உங்கள் கும்பல் ஏகாதிபத்தித்துடன் செய்துவரும் விபச்சாரத்தை பெருமையாக அறிவிக்கின்றார்களே அண்ணை. இதை அடிவருடித்தனம் என்று தான் சொல்லாமல் வேறு எப்படித்தான் சொல்வது. புலியெதிர்ப்பு இணையங்கள் ஏகாதிபத்தியத்துடன் கொண்டுள்ள அரசியலைத்தானே பெருமையுடன் பிரசுரிக்கின்றது. அடிவருடித்தனத்தை அடிவருடித்தனம் என்று தானே சொல்வது.

 

3.மக்கள் விரோதிகள் என்று உங்களை நாங்கள் சொல்லுகின்றோம் என்றால் என்ன தவறு. நீங்கள் மக்கள் விரோதியில்லை என்றால் அதை நிறுவ முயலவேண்டும். மக்களுக்காக நாம் எப்படி, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்றோம் என்று நிறுவுங்கள். புலிகளும் தான் மக்கள் என்கின்றார்கள். நீங்களும் தான். எப்படி? அண்ணை!

 

4.மக்கள் விரோதத்;தை வாழ்வாக கொண்ட அரசியல் பொறுக்கிகள் ஜனநாயகம் பேசினால், அவர்கள் ஜனநாயக விரோதிகள் தான்;. மக்களுக்காக எந்த அரசியலையும் முன்னெடுக்காத பொறுக்கிகள், ஜனநாயகத்தின் முதல்தரமான விரோதிகள் தான்.

 

5.கொலை கொள்ளை செய்தவர்கள் என்று நாம் கூறுகின்றோமே ஏன்? கடந்தகால இயக்க வரலாறு, அதைத் தான் சுமத்துகின்றது. செய்தவன் திருந்த முடியாதா எனின் முடியும்;. எப்படி திருந்த முடியும்? கடந்தகால இயக்க அரசியலை நிராகரிப்பதில் தொடங்கி, மக்கள் அரசியலை முன்னெடுத்தலாகும். கடந்தகால மக்களுக்காக உண்மையாக போராடியவர்களை முன்னிலைப்படுத்தி, தாம் இழைத்த குற்றங்களை ஏற்றுக் கொள்வதே அடிப்படையான சுயவிமர்சனம். அதாவது மக்களுக்காக வாழ்தல், போராடுதல்;, மக்களுக்கு எதிரான அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்து போராடுதல், இது தான் சுயவிமர்சனம். இது புலியெதிhப்புக் கும்பலிடம் கிடையாது.

 

6.பெண்ணியம், இலக்கியம், மனிதநேயம் என்று புலம்பும் உங்கள் அனாமதேய அவதூறுகளுக்கே எதிர்மாறானது. சரி அது என்ன சாமான் என்று சொல்லுங்கள். கிலோவுக்கு விலையா பேசுகின்றீர்கள்.


இப்படி வரிக்குவரி இந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஜனநாயக விரோத வக்கிரத்தை அம்பலப்படுத்த முடியும்;. இவை முன்பு எழுப்பி பதிலளிகப்பட்டவைதான். இந்த அரசியலுக்கு இவர்கள் பதிலளிப்பதில்லை. அவதூறுகளைத் தான் பதிலாக தருவது உங்கள் அரசியல் மரபு. மலிவான இழிவான அவதூறுகளை பொழிவதே நிகழ்கின்றது. நிதர்சனம் டொட் கொம் 100 சதவீகிதம் என்றால் நீங்கள் 99 சதவீகிதம். உங்களுக்கு அவர்கள் அண்ணைதான். அண்ணை கோவியாதையுங்கோ, அவர்களை விட உங்களை தம்பி என்ற சொன்மைக்காக. ஆனால் அண்ணைமார்கள் தான் நீங்களும். நீங்களே சொல்லுகின்றீர்கள்

 

1."உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச் சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே."


என்ன அண்ணை இப்படி சொல்லிட்டீங்கள். பிரான்சில் அனைவருக்கும் இது அப்பட்டமான பொய் என்பது தெரியும்; அண்ணை. அண்ணை! உங்கடை புலியெதிர்ப்பு பாரிஸ் குஞ்சுகளிடம் இதைக் கேட்டு நல்லாகத் தெரிந்து கொள்ளுங்கள் அண்ணை. சரி நீங்கள் சொல்லுகின்ற படி இருக்கின்றது என வைத்துக் கொள்வோம் அண்ணை. நாங்கள் கூலிக்கு வேலை செய்கின்றவர்கள் அண்ணை. தொழிற்சட்டத்துக்கு உட்பட்டு வேலை செய்பவர்கள் அண்ணை. உங்களைப் போலே ஏகாதிபத்தியத்துக்கு அடிவருடி தொழில் செய்பவர்கள் அல்ல அண்ணை. எதற்கு எடுத்தாலும் ஏகாதிபத்தியதிடம் ஒடிச் சென்று அழுபவர்கள் அல்ல அண்ணை. உங்கடை கருணா அண்ணை இன்று செய்வது போல், கூலிக்கு கொலை செய்கின்ற தொழில் இல்லை அண்ணை.


உங்கடை கருணா அண்ணை உழைத்தா வாழ்கின்றார்! அண்ணை! நாங்கள் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூலிக்கு வேலை செய்யிறம் அண்ணை. உங்களைப் போல மற்றவனின் உழைப்பில் நாம் வாழ ஆசைப்படவில்லை அண்ணை. அண்ணை! நாம் கூலிக்கு உழைக்கும் போது, அது புலி பினாமியாக இருந்தால் என்ன அல்லது தனியார் முதலாளியாக இருந்தால் என்ன, எல்லாம் எமக்கு ஒன்று தான் அண்ணை. நாம் வேலை செய்வதற்கு கூலி வாங்கிறம் அண்ணை. இதற்கு முன்னமும் கட்டிடத் தொழிலாளியாகத் தான் அண்ணை வேலை செய்தோம். அண்ணை! அப்போதும் நாங்கள் உங்களுக்கு எதிராக போராடினோம் அண்ணை.

 

2."இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது." என்று கேட்கின்றீர்கள். இதை உங்கடை கருணா அண்ணாச்சிட்டை கேளுங்கோ அண்ணை. கருணா புலியிலிருந்த போதே, எல்லாவற்றையும் மீண்டும் புலிகள் கொள்ளையி;ட்டவர்கள் அண்ணை. உங்கடை அண்ணை முன்பு ஓடிய பஜிரோ ஜீப்புகள் (ஒரு கோடி ரூபா) எல்லாம் இப்படியான காசிலேதான் வாங்கினவை அண்ணை. அங்கே கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை. கருணா அண்ணை எப்படி இண்டைக்கு சாப்பிடுகின்றார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ! அண்ணை! கருணா அண்ணை மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை, யார்ரை காசிலே ஒளிபரப்புகின்றார் என்ற கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை. பச்சையாக கேட்டதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணை.

 

3."நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகீனிர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே." நல்லது அண்ணை. புலியின் பிடியில் இருந்து விடுபடவில்லை அண்ணை. நாங்கள் சிறை உடைத்து தப்பி வந்தனாங்க அண்ணை. தெரியாதோ அண்ணை உங்களுக்கு!

 

அண்ணை! நீங்கள் சொல்லுவதே சரி என்று வைப்போம். காட்டிக் கொடுத்த அந்த நபாகள் எல்லாம் யார் அண்ணை. உங்களுக்குத் தானே அது தெரியும் அண்ணை. சொல்லுங்கோ அண்ணை! தனிப்பட்ட அந்த ஒப்பந்தம் என்னவென்று உங்களுக்குத் தானே தெரியும் அண்ணை. அது என்ன ஒப்பந்தம் அண்ணை. கொலை என்கின்றீர்கள், நீங்கள் செய்த கொலைகளைச் சொல்லுறீங்களா!. அதை மற்றவன் மேல் போடும், உங்கடை அன்றாடச் செய்தியைச் சொல்லுறீங்களா! அண்ணை. உலகம் அதை நம்புவதில்லை அண்ணை. அன்றாடம் கொலைகளை புலியெதிர்ப்பு கும்பலும், புலியும் மாறிமாறி கூறுவது போல் சொல்ல நினைக்கின்றீர்களோ அண்ணை.

 

அது அவியாது அண்ணை. நாங்கள் ஊர் அறிய வாழ்பவர்கள் அண்ணை. உழைத்து போராடி வாழ்பவர்கள் அண்ணை. எமக்கு எதிரான அவதூறால் எதையும் நிறுவமுடியாது அண்ணை. உங்களைப் போல் ஒளித்து நின்று வாழ்பவர்கள் அல்ல அண்ணை. எமது வாழ்க்கை பகிரங்கமானது அண்;னை. நாம் வாழ்ந்து காட்டுபவர்கள் அண்ணை. உங்களைப் போல் திடீர் ஜனநாயகத்துக்கு வந்தவர்கள் அல்ல அண்ணை. கடந்த 25 வருடப் போராட்டம் பலரறிய உண்டு அண்ணை. கல்வெட்டு முதல் கொலைகள் என பலவற்றை நாம் சந்தித்தவர்கள் அண்ணை. ரெலோ 1985 இல் கண்ட இடத்தில் சுட உத்தரவு இருந்தது அண்ணை. பிளாட் என்ன கொல்ல வாமதேவனையே அனுப்பியது அண்ணை. புலிகள் வதைமுகாமில் கொல்ல வைத்திருந்த போது தப்பியவன் அண்ணை. ஆதாரப+ர்வமாக அதற்கு எதிரான உரைகள் பத்திரிகை செய்திகள் எல்லாம் உண்டு அண்ணை. புலிகள் அதன் பின் கொல்லமுயன்று தோற்றவர்கள் அண்ணை. கல்வெட்டு முதல் பல அவதூறுகள் முன்பே பல உள்ளது அண்ணை. கவிஞர் ஜெயபாலன் சுவடுகளில் அவதூறுகள் பொழிந்தவர் அண்ணை. எனது நேர்மையான போராட்டத்தின் முன், வெற்றி பெறாது இவையெல்லாம் தோற்றுப் போனது அண்ணை.

 

4."ஏந்தவித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், ஊடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடையவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது."

 

எப்ப அண்ணை நித்திரையாலே எழும்பி ஜனநாயகம் பேசகின்றீர்கள். அண்ணை இதற்கு ஒரு வரலாறு உண்டு அண்ணை. அதை தெரிந்துகொண்டு கதையுங்கோ அண்ணை. அண்ணை உங்களைப் போல் நாம் திடீர் ஜனநாயகவாதிகள் அல்ல. நீங்கள் எல்லாம் ஜனநாயகம் பேசாது, கொலை அரசியல் செய்த போதே உங்களை எதிர் கொண்டவர்கள் நாங்கள் அண்ணை.

 

நீங்களே அண்ணா! என்று விழித்து சொல்லுறீங்கள் "அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவர்கள், ஐரோப்பாவில் மிகச்சிலரே." என்கின்றீர்கள். பிறகு "மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா?" என்று கேட்கின்றீர்கள். என்ன சுத்துமாத்தா செய்றீங்க அண்ணை. என்ன இது உங்கள் தொழிலா அண்ணை. நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கு எமது இணையத்தில் உள்ள, 1000 மேற்பட்ட கட்டுரைகள் சாட்சியாகவே உள்ளது. புலிகளின் அனைத்து மக்கள் விரோத விடையங்களையும், அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக யாரையும் விட அதிகமாக விமர்சித்தவன் இலங்கையில் நான் மட்டும் தான். மக்களுக்கு எதிரான அனைத்தையும் நான் விமர்சிக்கின்றேன்.
உங்களின் மக்கள் விரோத ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தையும் நாம் விமர்சிகின்றோம்;. எம்மீதான அவதூறுகள் மூலம் இதை மூடிமறைக்க முடியாது. இந்த அவதூறுகளைக் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை.


"அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளாது அண்ணே" என்று மிரட்டாதையுங்கோ அண்ணை. உங்கடை புலியெதிர்ப்பு மிரட்டலைக் கண்டு நாங்கள் ஒடுங்குபவர்கள் அல்ல. நீங்கள் மிரண்டு ஓடக்கே கவணம்; அண்ணை. மிரண்டு ஒடும் போது, அவதூறால் (தூசணத்தால்) புணர்ந்து போடதையுங்கோ அண்ணை. கண்ட மரங்களை (பெண்களை) கற்பழிச்சு போடதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை! மிரண்டு தறிகெட்டு ஓடும் போது மிருங்களை கொன்று (மாற்றுக் கருத்துக்களை) போடாதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை. மிரண்டு ஓடக்கே புலியெதிர்ப்பு பைத்தியம் பிடிச்சிடும் அண்ணை. கவனம் அண்ணை! கொஞ்சம் ஓடக்கே சிந்தியுங்க அண்ணை. நிதானமாக ஒடுங்கண்ணை.

11.03.2006