அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!
- அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது
அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது!
- கல்வி கொடுத்த கவர்மெண்டு
டாஸ்மாக் சாராயத்தை விற்குது!
கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்!
இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்!
ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்!
- படிக்க வகுப்பு இல்ல
பாடம் நடத்த வாத்தியார் இல்ல
குடிக்கக் கூட தண்ணி இல்ல
அடிப்படை பிரச்சனையை
தீர்த்து வைக்க வக்கில்லாமல்
'அனைவருக்கும் கல்வி' என்று
ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று!
பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று!
- செமஸ்டர் வந்தது! தேர்வு இரண்டு முறையானது!
பாக்கெட் பணமோ பறிபோகுது!
- சிப்டு முறை வந்தது! நேரம் மட்டுமே மாறுது!
புதுசா வாத்தியாரும் போடல! அடிப்படை பிரச்சனைளும் தீரல!
- ஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது!
ஜனநாயகத்தை கொடுக்கின்ற
கல்லூரித் தேர்தல் எங்கே போனது!
- கல்லூரியைக் கை கழுவது
கல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க
அரசு பல்கலைக்கழகமா மாற்றுது!
இதுவரை நீ.படித்து வந்த
பி.ஏ.,பி.எஸ்.சியும் பறிபோகுது!
- எப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு!
இதற்கெதிராக போராட வேண்டுமென்பதே
பகத்சிங் கண்ட கனவு
இன்றே பு.மா.இ.மு-வில் இணைந்திடு!
உரிமைக்கான போராட்டத்தை தொடங்கிடு!!